Tuesday, December 11, 2012

இரவில் ஓர் அழகி



அழகிய இரவில் உன்னை கண்டேனே பெண்ணே 

என் ஆண்மை அனைத்தையும் உன் காலில் வைத்தேன் கண்ணே 

கடலில் நான் 
கரையில் நீ 
இருளில் நாம் 
நிலா ஒளியில் பகிர்ந்தோம் காதலை.....

கடல் அலை கண்டேன் உனது காலின் அடியில் பெண்ணே 

என் கண்கள் உனது தேக நூலகத்தை ஆராய்ந்தது கண்ணே 

கனவில் நான் 
அருகில் நீ 
கை கோர்த்தோம் நாம் 
நிலவிலும்  பகிர்ந்தோம் காதலை....

பெண்ணே உன்னை எனது இமை மூடாமல்
கண்களில் நிறுத்தி காதலிக்குறேன்.... 

பெண்ணே எனது இதயம் துடிக்காமல் 
உன்னை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....