Wednesday, March 9, 2011

நான் பூ, நீ பட்டாம்புச்சி...!

என்ன நினைத்து அடி

உன்னிடம் மயங்கினேன்



காலடியில் இதயத்தை

உன்னிடம் சமர்பித்தேன்



காலையும் மாலையும்

உன்னிடம் போனதே



கண்ணை மூடி கனவிலும்

உன்னிடம் உறவாடினேன்



காதலில் வயப்பட்டேன்

உன்னிடம் அடிமையானேன்



கண்டப்படி நினைத்தேன்

உன்னிடம் இருந்து



கடைசியில் இல்லை

உன்னிடம் இதயம்..!



பட்டாம்புச்சி அடி நீ

ஒரு ஒரு பூவிடம்

தேன் உறிஞ்சும் விஷக்கிருமி அடி..!



ஆனால் வாடாமல் மீண்டும்

தேன் கொடுக்கும் அட்சயப்பூ அடி நான்..!

என்னென்றால் நான் காதலித்தேன் உன்னை..!



-விக்னேஷ்

No comments:

Post a Comment