Tuesday, December 11, 2012

இரவில் ஓர் அழகி



அழகிய இரவில் உன்னை கண்டேனே பெண்ணே 

என் ஆண்மை அனைத்தையும் உன் காலில் வைத்தேன் கண்ணே 

கடலில் நான் 
கரையில் நீ 
இருளில் நாம் 
நிலா ஒளியில் பகிர்ந்தோம் காதலை.....

கடல் அலை கண்டேன் உனது காலின் அடியில் பெண்ணே 

என் கண்கள் உனது தேக நூலகத்தை ஆராய்ந்தது கண்ணே 

கனவில் நான் 
அருகில் நீ 
கை கோர்த்தோம் நாம் 
நிலவிலும்  பகிர்ந்தோம் காதலை....

பெண்ணே உன்னை எனது இமை மூடாமல்
கண்களில் நிறுத்தி காதலிக்குறேன்.... 

பெண்ணே எனது இதயம் துடிக்காமல் 
உன்னை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

Monday, September 17, 2012

எனது இதயத்தில் பதிந்தாய்


அழகிய திமிரில் 
என்னை ஆட்கொள்ள வைத்த கண்கள் 

பழகிய நொடியில் 
காதலில் மொக்கி சாகடித்த அழகு 

என்னை அறியாமல் 
திமிறி வந்த எனது மோகம்

மெல்லிய இரவு இசையில் 
இரு இதயம் மட்டும் 

கண்ணிமை உலகத்தில் 
கருமையான கண்ணில்
நிலவே விழியில் 
சாட்சியாய் வைத்து

கடல்கரை மணலில் 
பிஞ்சு விரலில் 
நீ எழுதிய 
வார்த்தை 
என்னது பெயருக்கு 
அருகில் உன்னது பெயர் 

கடல் அலைகள்  
அளித்தாலும்
எனது இதயத்தில் 
பதிந்தாய்
ஆரா சுவடாய்..  

Saturday, August 18, 2012

யார் பெண்கள்???



கண்களில் கொடிய விஷமும் 
நெஞ்சில் கோடி கோடி வஞ்சமும் 
சேர்ந்து படைத்த சித்திரங்கள் 
சித்தர்களையே திக்காட செய்த 
ஷேத்திரங்கள் 
 
எண்ணத்தில் குரோதமும் 
காமத்தை ஆயுதமாய் கொண்ட 
சூற்பனகையின் வாரிசுகள்

பேதையை நம்பி 
பாதை மாற்றி
மாண்ட ஆண்வர்கங்கள் 
பல கோடி

என்றும் அடிமையாய்
என்றென்றும் காலடியில் 
சகடையில் திணித்து 
உலகாளும் அரக்கிகள் 

Wednesday, August 1, 2012

நிலவில் நான்...!





மனம் போல மெல்ல பறந்தேன்
ஒரு அடிக்கு நான்கு அடி நகர்ந்தேன்

அண்டத்தில் காற்று இல்லை
ஆனால் அடியேனுக்கு இதயம் துடிக்கவில்லை

வறண்ட உலகில்
தவழ்ந்தேன் மடகில்

இரண்டு கண்களில் நான் காண 
ஈராயிரம் கண்கள் என்னை காண 

முடிவில்லா முற்படுக்கையில் நான்
மெல்ல இடி மேல் அடி வைத்து நகர்ந்தேன் நான்

இவை நடந்தது 
வெள்ளி நிலவில்

என் அவளின் 
கடைக்கண் பார்வை பட்டதில் 

பேதையின் பார்வை
பாதை மாற்றியது

பூமி - நிலவு (Fast Track Point to Point Service)

Wednesday, July 4, 2012

நட்பு தொலையுமா...!


மனதில் ஒரு மழை காலமாய் இருந்தது 
உன்னது நட்பில் 

அதை முடித்துக்கொண்டது

அதிசயமாய் உள்ளது

காதலுக்கு முடிவு உள்ளது

நட்புக்கு முடிவு இல்லையாம்

மூடர்கல். 


மனம் இறுகிவிட்டது 

மனதார சிரித்து நாள் ஆகிவிட்டது  

மீண்டும் வாழ ஆசைப்படுகிறேன்

உன்னுடன் தோழா

என்றும் நட்புடன்..!

வாடா மச்சி..!

Thursday, June 21, 2012

அடைத்தாய் என்னை.. உன்னுள்..



கடவுளின் தரிசனம் அல்லவே
கருவிழி என்னை பார்க்க 
பெண்ணே உந்தன் 
பொல்லாத அழகு பாட
பூஆடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாட
தனிதமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமல் போனால் கூட்டில் 
நிற்குமோ எந்தன் ஆவி??

Sunday, June 3, 2012

மச்சி..!




இன்றும் நினைவில் உள்ளது 
உன்னை சந்தித்த நொடிகளை 

வெட்கம் பல
வார்த்தை சில

வேடிக்கையாய் உள்ளது 
இன்று நினைக்கையில்

நீ அருகில் இருக்கையில் 

இதயத்துடிப்பை தவறினாலும் 
இருப்பேன் உயிரோடு

என்றும் உனது
நினைவில் நண்பா...!

Tuesday, April 10, 2012

நீதானா…




நெஞ்ஜோடு உன்னை சேர்த்தேன் 
கவிதை படிக்க 
வார்த்தைகளின் மூலுபொருலும்
நீயானாய்…

கண்ணோடு உன்னை பார்த்தேன் 
மனதை கொள்ளைஅடித்து 
உயிர் என்னும் சித்திரமே 
நீதானா…

நீயே 
என் சுவாசமும் 
ஜீவனாய்
ஆனாயே ..

கன்னஅழகின் மோகங்களில் 
சரணடைய
சிநேகத்தின் காற்றாய் நீ 
சாய்த்தாயே…

மழையின் மொழியிலும் 
உன்முகமே 
கனவென்னும் உலகையே 
நீ ஆண்டாய்…

நெஞ்ஜோடு உன்னை சேர்த்தேன் 
கவிதை படிக்க 
வார்த்தைகளின் மூலுபொருலும்
நீயானாய்…

கண்ணோடு உன்னை பார்த்தேன் 
மனதை கொள்ளைஅடித்து 
உயிர் என்னும் சித்திரமே 
நீதானா…


Sunday, March 25, 2012

உனது காதல் எனது வாழ்கையில் கிடையாதா???


 

உணர்கிறேன் நெருப்பை 
எரியும் இதயத்தில் ....
ஒவ்வொரு நொடியும் உன்னைவிட்டு பிரிந்ததில் இருந்து...
நீ வேண்டும்
என்றும் என்னை சுற்றி...
ஒவ்வொரு நாளும் உன்னில் இருந்து நான் தொடங்க...


ர்கிறாயா எனது உணர்வுகளை...
எனது கண்களே உனக்கு காட்டுமே...
நினைப்பது யாவும் கிடைக்கையில் 
நீ மட்டும் இல்லாதது கொல்கிறதே...
உனது காதல் எனது வாழ்கையில் கிடையாதா???

Thursday, February 16, 2012

அழிவில்லாதது...





வானவில் நிறம் மாறிப்போன  மர்மம் என்ன...

மின்னலும் மழையாகி போன மர்மம் என்ன.....

என் உடல் மட்டும் என்னிடம்

எந்தன் உயிரெல்லாம் உன் சுவாசம் தானே...

ஜில் ஜில் ஜில் தென்றல் என்னை உரசிபோகும் போது 

என் இதயம் உன் பெயர் சொல்லி நிற்பது ஏனோ... 

என் நெஞ்சில் காதல் உன்னை சுற்றி என்றென்றும் வரும் 

உன்னது வயதென்னவோ நிறம் என்னவோ

என் காதல் அழிவில்லாதது...

Wednesday, February 8, 2012

அன்பே...!







உன்னை  கண்டதில்  கவிங்கனாய் மாறினேன் 
மெல்லிய  காற்றிலே  வானவில்  வரைகிறேன் 

என்மீது  தான் பனித்துளி  படருதே 
என்  இருதயம்  உன்  காலடியில் மறையுதே 

இமையேன நான் 
விழியேன நீ 
இருதயத்தில்
மனந்தோமே

நினைவேன நான் 
மனமென நீ 
காதலிலே 
கலந்தோமே

உன்னை பார்த்ததும் என்னை மறக்கிறேன் 
தண்ணீரிலே ஓவியமாய் கரைகிறேன் 
ஒரு பெண்மையின் நேசத்தை உணர்கிறேன் 
உன்னையும் கடவுளாய் தொழுகிறேன் 

அன்பே... அன்பே... அன்பே...

Saturday, February 4, 2012

காதலிப்பேன்...



நான் போகிறேன்...!

நான் இங்கு இருந்தால்
வருவேன் உன் வாழ்வில்
மறுபடியும்...

ஆனால்
நினைப்பேன் என் வாழ்வில்
எப்பொழுதும்...

என்றும் உன்னை காதலிப்பேன்...
எப்பொழுதும் உன்னை காதலிப்பேன்...

நமது கசப்பான காதல்
நினைவுகளே என் மனதில்...
எனது காதல் சவ ஊர்வலத்தில்
கொண்டு செல்கிறேன்...
நான் போகிறேன்...
நீ அழுவதற்காக அல்ல..
இருவருக்கும் தெரியும்
நான் உனக்கானவன் அல்ல என்று...

ஆனால்...
என்றும் காதலிப்பேன்...
எப்பொழுதும் காதலிப்பேன்...

உன் வாழ்க்கை பயணம்
இனிதாக...
நீ நினைத்தது கிடைக்க...
என்றும் ஆனந்தமாய்...
இருப்பாய்...

ஆனால்...
என்றும் காதலிப்பேன்...
எப்பொழுதும் காதலிப்பேன்...

அன்பே...
என்றும்.. எப்பொழுதும்...
காதலிப்பேன்.
..