Wednesday, August 1, 2012

நிலவில் நான்...!





மனம் போல மெல்ல பறந்தேன்
ஒரு அடிக்கு நான்கு அடி நகர்ந்தேன்

அண்டத்தில் காற்று இல்லை
ஆனால் அடியேனுக்கு இதயம் துடிக்கவில்லை

வறண்ட உலகில்
தவழ்ந்தேன் மடகில்

இரண்டு கண்களில் நான் காண 
ஈராயிரம் கண்கள் என்னை காண 

முடிவில்லா முற்படுக்கையில் நான்
மெல்ல இடி மேல் அடி வைத்து நகர்ந்தேன் நான்

இவை நடந்தது 
வெள்ளி நிலவில்

என் அவளின் 
கடைக்கண் பார்வை பட்டதில் 

பேதையின் பார்வை
பாதை மாற்றியது

பூமி - நிலவு (Fast Track Point to Point Service)

No comments:

Post a Comment