Wednesday, March 16, 2011

நண்பேன் டா...!

இல்லை என்று
இரு உதடுகளும்
கூறாது

உன்னை காணா
வரை கண்களும்
மூடாது

நித்தமும் உன்னை
நினைக்காமல் நொடிகள்
நகராது

நீ இல்லாமல்
வாழ்க்கை அர்த்தம்
பெறாது தோழா...!

நண்பேன் டா...!

- விக்னேஷ்

Friday, March 11, 2011

அலையாய் மாற வரம் வேண்டும்

கண்டேன் அவளை
கடற்கரை அருகே

நின்றேன் ஒருகணம்
நித்தம் மறந்து

சென்றேன் அருகிலே
காற்றில் மிதந்து

வந்தனம் என்றேன்
வாய்மொழி மறந்து...!

கண்டால் என்னை
காணாமல் திரும்பி

சென்றால் தவழ்ந்து
தண்ணீர் விரும்பி

மெய்மறந்தேன் உன்
அலை விளையாட்டில்...!

கடல் அலையாய் மாறி

உன் பாதம் தொட
முடிவெடுத்தேன்

என்னை கடலுக்குள்
தொடுத்தேன்...!

ஆனால்
நிறுத்தினாய் என்னை
உன் விழியில்

நடத்தினாய் என்னை
உன் அருகில்

தொட்டாய் உன் விழியில்
என்னை
இதயத்தில்...!

தொடங்கினேன்
காதலிக்க உன்னை...!

- விக்னேஷ்

Wednesday, March 9, 2011

நான் பூ, நீ பட்டாம்புச்சி...!

என்ன நினைத்து அடி

உன்னிடம் மயங்கினேன்



காலடியில் இதயத்தை

உன்னிடம் சமர்பித்தேன்



காலையும் மாலையும்

உன்னிடம் போனதே



கண்ணை மூடி கனவிலும்

உன்னிடம் உறவாடினேன்



காதலில் வயப்பட்டேன்

உன்னிடம் அடிமையானேன்



கண்டப்படி நினைத்தேன்

உன்னிடம் இருந்து



கடைசியில் இல்லை

உன்னிடம் இதயம்..!



பட்டாம்புச்சி அடி நீ

ஒரு ஒரு பூவிடம்

தேன் உறிஞ்சும் விஷக்கிருமி அடி..!



ஆனால் வாடாமல் மீண்டும்

தேன் கொடுக்கும் அட்சயப்பூ அடி நான்..!

என்னென்றால் நான் காதலித்தேன் உன்னை..!



-விக்னேஷ்