காதல் கனவுகள் ஆயிரம்
ஆனால் சுவடுகள் அறியேன்
உந்தன் நினைவுகள் நெஞ்சில்
கடல் அலைபோல் வர
நித்தம் துறந்தேன் நித்திரை
ஆனால் உயிர் அணைந்தது
மாசற்று மரமாய் போனேன்
மனதை அறுத்து சென்றதால்
வீசும் காற்றுக்கு தெரியுமா
வாசம் இதமா கனமா என்று
என் அழகிய காதலை
மறக்கடித்தாய்
என் குழந்தை காதலை
கருவருத்தாய்
பெண்கள் வேஷம் போதுமே
ஆண்கள் சுவாசிக்க வேண்டுமே
காதல் என்னும் போதை
அறிந்து
புரிந்து
தெரிந்து
பழகி வருவது அல்ல
காதல் ஒரு மாயை
உணர்ந்து
இன்புற்று
துன்புற்று
இழந்து
பெற்று
அனுபவித்து பெரும் சொர்க்கம்..!
