உணர்கிறேன் நெருப்பை
எரியும் இதயத்தில் ....
ஒவ்வொரு நொடியும் உன்னைவிட்டு பிரிந்ததில் இருந்து...
நீ வேண்டும்
என்றும் என்னை சுற்றி...
ஒவ்வொரு நாளும் உன்னில் இருந்து நான் தொடங்க...
உணர்கிறாயா எனது உணர்வுகளை...
எனது கண்களே உனக்கு காட்டுமே...
நினைப்பது யாவும் கிடைக்கையில்
நீ மட்டும் இல்லாதது கொல்கிறதே...
உனது காதல் எனது வாழ்கையில் கிடையாதா???

No comments:
Post a Comment