Wednesday, December 3, 2014

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை



நான் தனிமையில் கடத்துகிறேன் 
காரிர்ருளை

நீ என்னை விட்டு சென்ற கதவுஓரத்தில்
உன்னில் கண்டேன் பெரும் கடலை
அது உயர்ந்து கொண்டிருந்தது
அது நிலை இல்லாமல் இருந்தது
ஆகையால் தவறாய் அணுகினேன்

உன்னுடன் இருந்த இரவுகள்
அனைத்தும் இருளும் சொர்க்கமாய்

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை
நீ எனக்கு தேவையில்லை
ஆனால் எனது ஏக்கம் என்னுடன் மறையட்டும்

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை 
ஆனால் உனக்கு தெரிவிக்குறேன் 
எனது வாழ்க்கை நீ இல்லையென்றால் என்ன என்று 

நான் மாறினேன் கடல் பாறையில் இருந்து 
நொறுங்கும் கண்ணாடியாய்
எனது இருள் குணத்தை வெளிக்கொண்டு வந்தாய் 

இங்கே கூறியது 
உண்மையே
உன்னில் இருந்து 
வெளிபடுத்தவேண்டும் என்னை

உன்னது பிரிவில் வாடுகிறேன்
ஆனால் எனது மூச்சை நிறுத்தி

காதலில் விழுந்த எனக்கு 
விடுதலை உண்டா???

உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை 
நீ எனக்கு தேவையில்லை ...!!!

No comments:

Post a Comment