Friday, June 6, 2014

கனவே கலையாதே


கனவிலே  விழிக்கிறேன் 
என் அருகில் உன்னை கண்டேன் 

எனது இதழ் ஓரத்தில் புன்னகை உடன் 
உனது அருகில் படுத்துக்கொண்டேன் 

தவிக்கிறேன் உள்ளே 
தவிப்பது உன்னால் 
மனம் தாவி தாவி குதிக்குதே 

அவள் விழிகளின் திரை விலக 
என் இதயம் வேகமாய் துடிக்க 
நரம்புகள் பின்னி 
உடல் அசையாமல் 
உயிர் பிரியும் தருவாயில் 

செவ்இதழ்கள் விரித்து 
முக்கை உரசி 
வாயோடு வாய் வைத்து 
மீண்டும் உயிர் கொடுத்தாள்...!

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete